கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தொகுதி கந்த குமரன் ஊராட்சி, வீராணம் ஏரியில் சுற்றுலாத் துறையின் மூலம் படகு குழாம் அமைத்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்த அரசு நட வடிக்கை எடுக்குமா? என்றும் வீராணம் ஏரியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைத்து கொடுக்கப்பட்ட பூங்கா சீரழிந்துள்ளதை நவீன பூங்காவாக மாற்றிக் கொடுக்கவும் அரசு முன்வருமா? என அதி முக உறுப்பினர் என். முருகமாறன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன்,“பொதுப் பணித்துறையின் பராமரிப்பில் உள்ள வீராணம் ஏரி முக்கிய குடிநீர் ஆதாரம். பாசனத்திற்கும் பயன்ப டுத்தி வருகிறார்கள். எனவே, படகு குழாம் அமைக்க சாத்தி யக்கூறுகள் இல்லை” என்றார்.