மூன்றாம் கட்ட ஊரடங்கு சில பணிகளுக்கான லேசான தளர்வுகளுடன் திங்களன்று அமலுக்கு வந்தது. இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட பணிகள் மற்றும் தொழில்களுக்கான முன் அனுமதியை பெறவும், அதற்கான பயணங்களுக்கு பாஸ் பெறவும் மாவட்ட ஆட்சியரகங்களில் ஏராளமான மக்கள் கூடினர். தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. மாவட்ட நிர்வாகங்களின் பொருத்தமான திட்டமிடல் இல்லாததால் விளைவாக கொரோனா பரவலுக்கு இதுவும் காரணமாகிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. (இடம் மதுரை ஆட்சியரகம்)