கரூர், நவ.22- தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி பிஷப் ஹீபர் மேல் நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மாநாட்டுக்கு மாநில தலைவர் அ. சேகர் தலைமை வகிக்கிறார். மாநில பொதுச்செயலாளர் பொன்.ஜெய ராம் வேலை அறிக்கையை முன் வைத்து பேசுகிறார். மாநில பொரு ளாளர் நா.வினோத்குமார் நிதி நிலை அறிக்கையை முன்வைத்து பேசுகிறார்.
அண்மைக்கால போராட்ட படிப்பினைகளும், எதிர்கால சவால்களும் என்ற தலைப்பில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு சிறப்புரையாற்று கிறார். மாநில பொருளாளர் மு.பாஸ் கரன் கூட்டத்தை நிறைவு செய்து பேசுகிறார். கல்வித்துறை நிர்வாக அலு வலர்கள் சங்க மாநில செயலாளர் சி. ஜே. குறிஞ்சிவேலன் நன்றி கூறுகிறார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பதை மாநில பொதுச் செயலாளர் பொன்ஜெயராம் தெரிவித்தார்.