tamilnadu

img

கர்தார்பூர் வழித்தடம் திறப்பு

புதுதில்லி,நவ.9-  கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி சனிக்கிழமையன்று திறந்து வைத்தார். சீக்கியமதத் தலைவர்களில் ஒருவரான குருநானக் தனது எஞ்சிய நாட்களை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக அங்கு கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப் பட்டுள்ளது.  அங்கு செல்ல இந்தியாவின் தேராபாபா நானக்கில் இருந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருத்வாராவுக்கு மக்கள் எளிதில் செல்லும் வகையில், 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள் ளது. குருநானக்கின் 550-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 500 யாத்திரிகர்கள் கர்தார்பூருக்கு பயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சி யில் மோடி பேசுகையில், இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நன்றி என்று கூறினார்.  விழாவில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட னர். விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரதமர் மோடி சந்தித்தார்.