tamilnadu

img

மேட்டூர் அணை நீர்மட்டம்  120 அடியாக நீடிப்பு

மேட்டூர்:
மேட்டூர் அணை  நீர்மட்டம் தொடர்ந்து 32-வது நாளாக 120 அடியாகவே நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த நவம்பர் 11 அன்று நடப்பாண்டில் நான்காவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. நீர்வரத்தைப் பொறுத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் 32-வது நாளாக நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.இதனால் டெல்டா பாசன விவசாயிகள், மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மேட்டூர் அணை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளியன்று காலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு  நீர்வரத்து 4 ஆயிரத்து 988 கனஅடியாக இருந்தது. டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் என மொத்தம் 4 ஆயிரத்து 600 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  

;