விருதுநகர், ஜூன்.21- விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் பணிகள் முழுமை யடையாத ரயில்வே மேம்பா லத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனால், மீதமுள்ள பணிகள் திட்டமிட்டபடி நடை பெறுமா என்ற சந்தேகத்தில் விருது நகர் பொது மக்கள் உள்ளனர். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே கடவு எண் 403 உள்ளது. இது விருதுநகரின் மையப் பகுதியில் உள்ளது. இந்த ரயில் பாதையில் நாளொன்றுக்கு சுமார் 60 ரயில்கள் வரை சென்று வந்தன. இதனால், ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டது. எனவே, மாணவ, மாணவிகள், வணி கர்கள், அரசு தலைமை மருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, அங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து, அப்போதைய தமிழக அரசு மேம்பாலம் கட்ட ரூ.35 நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் ரூ.20.50 லட்சம் மேம்பாலம் அமைக்கவும், அணுகுசாலை, நிலம் கையகப் படுத்தும் பணிக்காக மீதமுள்ள தொகையும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மேம்பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத் திற்கு சென்றனர். பின்பு, உயர் நீதி மன்ற மதுரைக் கிளை, முதலில் மேம்பாலம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, 4.3.2016ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 18 மாதத் திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப் பட்டது. ஆனால், பாதாள சாக்கடை, மின் கம்பங்கள் மற்றும் மின் வயர்களை மாற்றி அமைத்தல் போன்ற காரணங்களால் பணிகள் முடிவடைய காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், பாலத் தின் கட்டுமானப் பணி 80 சதவீதம் முடிவடைந்த நிலையில் கடந்த 8.3.2019 முதல் பொது மக்கள் தாங்களாகவே அப்பாதையில் செல்லத் தொடங்கினர். அதில், பேருந்துகள் தவிர இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில், வெள்ளிக் கிழமை காலை, காணொளிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமமூர்த்தி சாலை மேம்பாலத்தை திடீரென திறந்து வைத்துள்ளார். இதை யடுத்து, விருதுநகர் கோட்ட பொறி யாளர் ஞானமூர்த்தி, பரமக்குடி, கிராமச் சாலைகள் கோட்ட பொறி யாளர் மதியழகன், உதவி பொறி யாளர் மணிமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் ராமமூர்த்தி சாலை யில் முறையாக பாலத்தை திறந்த னர்.
ஆனால், மிக முக்கிய பணி யான பாலத்தின் இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்பட வில்லை. இதனால், இரவு நேரத்தில் மேம்பாலத்தில் விபத்து கள் நேர்ந்துவிட வாய்ப்புள்ளது. பாலத்தின் கீழ்ப் பகுதியில் இரு புறமும் உள்ள அணுகுசாலையில் சாலைப் பணி கிடப்பில் உள்ளது. மேலும், பாதசாரிகள் ஒரு பகுதி யிலிருந்து மறுபுறம் செல் வதற்கான படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. எச்சரிக்கை பலகைகள், ராம மூர்த்திசாலையின் சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படாமல் உள்ளன. ரயில்வே பீடர் சாலை சந்திப்பில் கழிவு நீர் வாறுகால் அருகே மிகப்பெரிய பள்ளம் உள்ளது. அதை நெடுஞ் சாலைத்துறையினர் மூடவில்லை. இதனால், அங்கு அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இந்த நிலையில், முதல்வர் மேம்பாலத்தை திறந்து வைத்துள் ளார். ரூ.20 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலம் திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஏன் கலந்து கொள்ள வில்லை எனவும், திறப்பு விழா முடிந்து விட்டதால், எஞ்சியுள்ள பணிகள் தரமாகவும், வேகமாக வும் நடைபெறுமா எனவும் விருது நகர் பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். (ந.நி.)