tamilnadu

img

மர்மக் காய்ச்சலுக்கு மாணவர் பலி

புதுக்கோட்டை, நவ.9- ஆலங்குடி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் சனிக் கிழமை உயிரிழந்தார். ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்திவிடுதியைச் சேர்ந்தவர் அய்யாமணி மகன் லோகேஸ்வரன்(20). தனி யார் கல்லூரி மாணவரான இவருக்கு, சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. தொடர்ந்து, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக் கோட்டை அரசு மருத்து வக்கல்லூரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த லோகேஸ்வரன் சனிக் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லூரி மாண வர் மர்மக்காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி யினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

;