கும்பகோணம், நவ.28- தஞ்சை மாவட்டம் கும்பகோணத் தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்தது. அரை மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழையால் சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு நெற்பயிர் நன்றாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் குளிர்ந்த பருவநிலை நிலவி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். திருவிடைமருதூர், திருப் பனந்தாள் ஒன்றியங்களில் இரவு விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. இதில் பந்தநல்லூர் அருகே சோழிய விளாகம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு திட்டத்தின் கீழ் 30 க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளில் கிராம மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இதில் தொகுப்பு வீடுகள் காலப் போக்கில் பழுதடைந்து வருகின்றன. இதனால் மராமத்து பணிகள் செய்து சீர் செய்ய வேண்டுமென பந்தநல்லூர் திருமங்கைசேரியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாம்களில் குடியிருப்புவாசிகள் தமிழக அரசுக்கு மனு அளித்து இருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சோழிய விளாகம் மாரி யம்மன் கோவிலை சேர்ந்த மாசிலா மணி மனைவி துர்கா(வயது 28) மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள். அதில் ஒரு குழந்தை கடந்த ஆண்டு இறந்து விட்டது. கணவரும் கடந்த ஆண்டு இறந்து விட்டார். அவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வரு கிறார். இவரது ஓட்டு வீடு மழையால் முற்றிலும் சேதம் அடைந்தது. இது போல் அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மனைவி பங்கஜம்(60). விவசாய கூலித் தொழிலாளி. இவரது கணவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவர் களுக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் அனைவரும் வெளியூரில் பணி புரிகின்றனர். இவரது தொகுப்பு வீட்டின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து முற்றிலும் வீடு சேதமடைந்தது. இதுகுறித்து கிராம மக்கள், வரு வாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் திரு விடைமருதூர் தாசில்தார் சிவக் குமார், கிராம நிர்வாக அலுவலர் சபரி ராஜன் ஆகியோர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து மழையால் பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அரசு சார்பில் தொகுப்பு வீடு களை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் சிவகுமார் உறுதி அளித்தார்.