tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தெற்குவாசல் பகுதிக்குழு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

தியாகி லீலாவதி 23 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தெற்குவாசல் பகுதிக்குழு சார்பில் நிவாரணப் பொருட்கள் பகுதிக்குழு செயலாளர் யு. எஸ். அபுதாகீர் தலைமையில் வழங்கப்பட்டன. சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மா. செல்லம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.லெனின், வை.ஸ்டாலின் ஆகியோர் மக்களுக்கு பொருட்களை வழங்கினர். பகுதிக்குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், அழகேசன், எஸ்.எஸ்.பாலன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;