tamilnadu

img

மாதந்தோறும் கள ஆய்வு: ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை, ஆக. 8- அரசின் திட்டங்கள் குறித்து கள  ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  அரசின் வளர்ச்சித் திட்டப் பணி கள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்  கள் ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் வியாழ னன்று (ஆக. 8) தொடங்கிய கூட்டத்  தில், 16 மாவட்டங்களின் ஆட்சியர் கள் பங்கேற்றனர். இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடிமராமத்து,  மழை நீர் சேகரிப்பு, பொது விநி யோகத் திட்டம், குடிநீர் விநியோ கம், ஓய்வூதியத் திட்டம், வேளாண்  சார்ந்த திட்டங்கள் செயல்படுத் தப்படுவது தொடர்பாக ஒவ்  வொரு மாதமும் கள ஆய்வு மேற் கொள்ளுமாறு ஆட்சியர்களுக்கு வலியுறுத்தினார். ஆய்வு விவரங்கள் அடங்கிய அறிக்கையை மாதம் தோறும் தன்  னுடைய அலுவலகத்திற்கு அனுப்பி  வைக்குமாறும் முதலமைச்சர் கூறி யுள்ளார். 4 மாதங்களுக்கு ஒரு முறை  தனது தலைமையில் ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்  என்றும் அவர் தெரிவித்தார். நீர்வளம் மற்றும் மேலாண்மை இயக்கத்தைச் சுட்டிக் காட்டிய முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு சொட்டு நீரைக் கூட வீணாக்கா மல் சேமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.   இதனிடையே 15 மாவட்ட ஆட்சி யர்களை வெள்ளியன்று (ஆக. 9)  சந்தித்து முதலமைச்சர் ஆலோ சனை நடத்தவுள்ளார்.