tamilnadu

img

பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கே.எஸ்.அழகிரி சாடல்

சிதம்பரம், செப். 3- தவறு மேல் தவறு செய்து  மத்திய பாஜக அரசு பொரு ளாதாரத்தை சீர்குலைத்து விட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கடலூர் மாவட்டம்  சிதம்பரத்தில் செய்தியாளர் களை சந்தித்த அவர், “ வெளி நாட்டு பயணத்தின் மூலம் முத லமைச்சர் எடப்பாடி, அந்நிய  மூலதனம் பெற்று வந்தால்  மகிழ்ச்சி தான். சென்னை யில், 2 முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் எவ்வளவு மூலதனம் கிடைத்துள்ளது, எந்தெந்த இடங்களில் தொழிற்சாலைகள் துவங் கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்றார்.

தமிழகத்தில் உள்ள பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது 2 யூனிட்டை தமிழகத்தில் துவங்காமல் ஆந்திரா, ஹரியானாவிற்கு செல்கின் றன. தமிழகத்தில் உள்ள  தொழில் நிறுவனங்களை தக்க வைக்க முடியாதவர்க ளால் வெளிநாட்டிற்குச் சென்று முதலீட்டை ஈர்க்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நடப்பு காலாண்டில் ஜிடிபி 5 சதவீதம் குறைந்துள் ளது. இது கடந்த 9 ஆண்டு களில் இல்லாத வீழ்ச்சி யாகும். 3.50 லட்சம் பேர்  ஆட்டோமொபைல் தொழி லில் வேலை இழந்துள்ளனர். பிஸ்கெட் நிறுவனத்தில் 10 ஆயிரம் பேர் ஒரே நாளில் வேலை இழந்திருப்பது, மோடி ஆட்சியின் பொருளாதார வீழ்ச்சி சுனாமியாக உள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என்று தவறுக்கு மேல் தவறு செய்து பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டி னார். விவசாயிகளுக்கு கடன்  எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக 16 தனியார் வங்கிகளை முன்னாள் பிர தமர் இந்திராகாந்தி தேசிய  மயமாக்கினார். ஆனால்,  இப்போது, வங்கிகள் இணைப்பால் விவசாயிக ளுக்கு கடன் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங் கப்படும் கடனுக்கான வட்டியை 2 சதவீதமாக குறைக்க வேண்டும். விவ சாயிகளுக்கு சலுகை வழங்கி னால் மட்டுமே நாடு பஞ்சத்தி லிருந்து மீளும். அவர்க ளுக்கான காப்பீட்டையும் பொதுத்துறை வங்கிகளே ஏற்க வேண்டும் என்றும் அழகிரி வலியுறுத்தினார்.