tamilnadu

img

காத்தவராயன் எம்எல்ஏ மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை,பிப்.28- திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் கே.பி. பி.சாமியையும், காத்தவராயனையும் பறி கொடுத்திருப்பது தனக்கு பேரிழப்பு என்று மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில் கூறியிருப்பதாவது:- எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த வரும், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரு மான காத்தவராயன் திடீரென்று மறை வெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு  சொல்லொணாத் துயரத்திற்குள் ளானேன். அவரது மறைவிற்கு கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கி றேன்.

கடைக்கோடி தொண்டனிடமும் கனிவுடன்  பழகும் மனித நேயமிக்க பண்பாளர். பேர ணாம்பட்டு நகராட்சித் தலைவராக பணி யாற்றி பல்வேறு சமுதாயப் பணிகளையாற்றி கழகத்திற்கு அந்தப் பகுதியில் நற்பெயர் சம்பாதித்துக் கொடுத்தவர். குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று கழக சட்டமன்ற உறுப்பினராக அமோக வெற்றி பெற்ற அவர் தொகுதி பிரச்ச னைகளை சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வ மாக தொகுத்து வாதாடி அவையில் இருந்த வர்களையெல்லாம் வியக்க வைத்தவர். காத்தவராயனுக்கு “கழகப் பணியும்” “மக்கள் பணியும்” இரு கண்கள் போன்றது  என்பதை நானறிவேன். மக்கள் இயக்கத்தின் அசைக்க முடியாத தூணாக குடியாத்தம் பகுதியில் விளங்கியவர்.  என்னுடன் பணியாற்றி வரும் கழக சட்ட மன்ற உறுப்பினர்களில் நேற்று கே.பி.பி.சாமி யையும், இன்று காத்தவராயனையும் பறிகொ டுத்திருப்பது எனக்கு பேரிழப்பு. இந்த துயர மிகுந்த தருணத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்  பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கி றேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

;