சென்னை,பிப்.28- ஈரான் நாட்டில், கொரோனா பீதியால் தவித்து வரும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் பல்வேறு இடங்களில், இந்திய மீன வர்கள் சுமார் 450 பேர் மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், இவர்களில், 300 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரானில் தற்போது, கொரோனா வைரஸ் வேக மாக பரவி வருவதால், அவர்கள் அங்கிருந்து வெளி யேற முயன்றும், பல்வேறு நாடுகளுக் கும், விமான சேவை ரத்தாகி விட்டதால், தாயகம் திரும்ப இய லாது தவித்து வருவதாகவும், முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, கிஷ் துறைமுகம், சேரூ உள்ளிட்ட ஈரானின் பல்வேறு இடங்களில் உள்ள தமி ழக மீனவர்கள் 300 பேரையும், பத்திரமாக மீட்டுத்தரு மாறு, முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.