tamilnadu

img

விளிம்புநிலை மக்களுக்கு வழங்க முகக்கவசங்கள் உற்பத்தி அதிகரிப்பு

சென்னை, மே 12- உலகம்முழுவதும்  கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஒழிப் பின் முன்னிலை பணி யாளர்களுக்கு தொடர்ந்து உதவும் முயற்சியாக பியட்  கிறைஸ்லர் ஆட்டோ மொபைல்ஸ் (எப்சிஏ)   அதன்  முகக்கவசங்கள் உற்பத் தியை மும்மடங்கு அதிக ரித்துள்ளது.

அதன் ஆரம்ப திறனை விட மூன்று மடங்குகள் அதிக ரித்துள்ளதை அறிவித்துள் ளது. முன்னர் அறிவித்தபடி எப்.சி,ஏ சீனாவில் தனது கோமாவ் உற்பத்தியகத்தை மாதத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் வகையில் தயார் செய்தது.

ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி தொடங்கியதைத் தொடர்ந்து இரண்டு லைன்க ளில் மாதத்திற்கு 30லட்சம் முக கவசங்களை உற்பத்தி செய்யும் இலக்குடன் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியின் முதல் 10  நாட்களில் 10  லட்சத்திற்கும்  அதிகமான கவசங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. சமூகத்தில் மிகவும்  பாதிக்கப்படக் கூடியவர்க ளுக்கு விளிம்பு நிலை மக்க ளுக்கு வழங்குவதற்காக 2லட்சம் முகக்கவசங்கள் இந்தியாவுக்கு வழங்கப் பட்டுள்ளன.