tamilnadu

img

மக்களைப் பற்றி சற்றும் சிந்திக்காத ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது : மு.க.ஸ்டாலின்

திருநெல்வேலி, அக். 9 - மக்களைப் பற்றி சற்றும் சிந்திக்காத  ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடினார்.  நாங்குநேரி  சட்டமன்ற தொகுதி யில் வருகிற 21-ஆம் தேதி இடைத்தேர் தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.  செவ்வாய்கிழமை இரவு  பல கிராமங் களில் திண்ணை பிரச்சாரம் மேற்  கொண்டார் மு.க.ஸ்டாலின். புதன் கிழமையும்  மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். நொச்சிக் குளம், கிருஷ்ணாபுரம் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண் டார். மக்களுடன் கலந்துரையாடிய அவர், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மக்களைப் பற்றி சிந்திக்காத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த அரசு மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு மானியக் கடன் வழங்க வில்லை. விவசாயம், பெண்கள் மேம்பாடு குறித்து இந்த அரசு கவலை  கொள்ளவில்லை. ஆட்சி மாற்றத்திற் கான முன்னோட்டம் தான் நாங்குநேரி இடைத்தேர்தல். திமுக ஆட்சிக்கு வந்தால்தான் விவசாயிகளும் பெண் களும் மேம்பாடு அடைய முடியும்” என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.