tamilnadu

img

விக்கிரவாண்டி அருகே சுங்கச் சாவடியில் கடும் வாகன நெரிசல்

விழுப்புரம், அக்.26- தீபாவளியையொட்டி 3 நாட்கள் விடு முறை அளிக்கப்பட்டு உள்ளது. இதை யொட்டி சென்னையில் வசிப்போர் தங்க ளது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இவர் கள் பேருந்து, கார்கள் மூலம் பயணித்த வண்ணம் உள்ளனர். வாகனங்கள் அனைத் தும் சுங்கச்சாவடி வழியாக கடந்து செல்கி றது. ஒவ்வொரு சுங்கச் சாவடியில் வாக னங்களை நிறுத்தி கட்டணம் வசூலிக்கப்படு வதால் நெரிசல் ஏற்படுகிறது. அதன்படி விழுப்புரம் அருகே விக்கிர வாண்டி சுங்கச் சாவடியில் கடும் வாகன நெரிசல் நிலவியது. டோல் கேட்டை கடக்க சுமார் 2 கி.மீ. தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் 3 மணி நேரம் தாமதம் ஆனதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்குள்ளானார்கள்.

விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு 6 வழிப்பாதையும், சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு 6 வழிப்பாதையும் உள்ளது. கடும் நெரிசல் காரணமாக சென் னையில் இருந்து திருச்சி செல்வதற்கு கூடு தலாக 3 வழிப் பாதைகள் திறக்கப்பட்டது. மேலும் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் கவுண்டர்களில் அமர்ந்தபடி பணம் வசூ லித்து வந்தனர். ஆனால் நெரிசல் காரண மாக ஊழியர்கள் கீழே இறங்கி வாகன ஓட்டிகள் அருகாமையில் வந்து பணத்தை வசூலித்தனர். சுங்கச்சாவடியில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது. இதனால் தீபாவளிக்கு செல்வோர் அவதியடைந் தனர்.

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் குவிந்தனர். ஆனால் போதுமான பேருந்து வசதி இல்லாததால் பேருந்து நிலையத்தில் விடிய விடிய பயணி கள் தவித்தனர். விழுப்புரம் வழியாகச் சென்ற ரயில்களிலும் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. கடலூர் பேருந்து நிலையத்திலும் பயணி கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக திருச்சி, விருத்தாசலம், சிதம்பரம், விழுப் புரம் மார்க்கமாக செல்வதற்கு கூடுதலாக பேருந்து இல்லாததால் ஊருக்கு செல் வோர் அவதிப்பட்டனர்.