tamilnadu

img

ரயிலில் 21 பவுன் நகையுடன் தவறவிட்ட பை மீட்பு பயணியிடம் ஒப்படைப்பு

மானாமதுரை, செப்.24- சிலம்பு ரயிலில் 21 பவுன் நகை மற்றும் 33 ஆயிரம் ரூபாயுடன் தவற விட்ட கைப்பையை ரயில்வே போலீசார் மீட்டு உரிய பயணியிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அறியாபட்டிணம் கிராமத்தைச் சோ்ந்த மணி முத்து மனைவி புவனேஸ்வரி (30).இவா் தனது குழந்தையுடன் சென்னையிலிருந்து திங்கள்கிழ மை இரவு புறப்பட்ட சிலம்பு ரயிலில் தேவ கோட்டைக்கு வந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை தேவகோட்டை வந்த புவனேஸ்வரி, தன்னுடைய கைப்பையை ரயிலில் வைத்து விட்டு இறங்கியுள்ளார். இதையடுத்து, ரயில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் இதுபற்றி தேவகோட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ரயிலில் பாதுகாப்புப் பணியிலி ருந்த ரயில்வே போலீஸார் புவனேஸ்வரி வந்த பெட்டியை சோதனை செய்தனர். இதில் அவர் அமா்ந்திருந்த இருக்கை அருகே கைப்பை இருந்தது தெரிய வந்தது. அதனைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸார் மானாமதுரை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.