tamilnadu

img

முதல்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை, டிச. 25- தமிழகம் முழுவதும் ஊரக  உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்க ளாக நடைபெறுகிறது. முதல் கட்ட மாக டிச.27 ஆம் தேதி நடை பெறும் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.  சேலம் மாவட்டத்தில் எடப்பாடி  உள்ளிட்ட 12 ஊராட்சி ஒன்றியங்க ளில் வரும் 27 ஆம் தேதியும் சேலம்  உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களில் 30ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடை பெறுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவல கங்களில் வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகளை தனித்தனியே பிரித்து வைக்கும் பணி நடந்து வரு கிறது.

வாக்குச்சாவடி மையங்களும் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டனர். நாகை மாவட்டத்தில் நாகப்பட்டி னம், கீழ்வேளூர், திருமருகல், கொள்ளிடம், செம்பனார்கோவில், சீர்காழி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2003 வாக்குச் சாவடி மையங்களில் முதல்கட்டமாக வரும் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பெட்டி, மை, அரக்கு, பூத் சிலிப், வாக்குச்சீட்டு, பசை, நூல்கண்டு, கட்டுக்கம்பி, சாக்கு, பேனா, பென்சில், குத்தூசி  உள்ளிட்ட பொருட்  கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச் சாவடிகளுக்கு 63 வாகனங்களும், காவல்துறையினருக்கு 12 வாக னங்களும், பறக்கும் படையின ருக்கு 80 வாகனங்களும் என 153  வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. வாகனங்களுக்கான உத்தரவு ஆணை, டோக்கன், ஓட்டுநர் அடை யாள அட்டைகள் ஆகியவை வழங் கப்பட்டன. டீசல் கட்டணம், வாடகை ஆகியவற்றுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் வாக்குப் பதி வுக்கான பொருட்கள் வியாழ னன்று(டிச.26) காலை வட்டார வளர்ச்சி  அலுவலகங்களிலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

 

;