tamilnadu

img

ஜேப்பியார் குழுமத்தில் 2வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு

சென்னை, நவ. 9- ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வரு மான வரித்துறை அதிகாரிகள் சோதனை 2 வது நாளாக நீடித்து வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள கல்வி நிறு வனங்களிலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள  ஜேப்பியார் மீன்பிடி துறைமுகத்திலும் வியாழன் காலை முதல்  வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு சம்பந்தமாக இந்த சோதனை நடத்தப்படுவ தாக கூறப்பட்டது. இந்நிலையில், 2 வது நாளாக வெள்ளியன்று சோதனை  நீடித்தது. முட்டம் துறைமுகத்தில் சென்னை, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறையின் 11 பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவினர், துறைமுக அலு வலகம், படகு தளம், விசைப்படகுகளின் எண்ணிக்கை போன்றவை குறித்து சோதனை நடத்தி விசாரணையில் ஈடு பட்டுள்ளனர். இதையொட்டி அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்  பட்டு உள்ளது. சோதனையின்போது, மீன் கொள்முதல் செய்ய  வந்திருந்த கேரள வியாபாரிகள் அச்சத்துடன் ஓட்டம் பிடித்த தால் மீன் விற்பனை நடைபெறவில்லை.