tamilnadu

img

வேலூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

வேலூர்,ஜூலை 27- வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  2 கட்டங்களாக பிரச்சாரம் செய்கிறார்.  முதல்கட்டமாக, ஜூலை 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 1,2,3 ஆகிய மூன்று நாட்களும் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் என தெரி விக்கப்பட்டு இருந்தது. சனிக்கிழமை ஜூலை 27 அன்று காலை நடை பயிற்சியாக சென்று அணைக்கட்டு தொகுதி, வேaலூர் தொகுதியில் உள்ள உழவர் சந்தைகளில் வாக்குகள் சேகரித்தார். விரிஞ்சிபுரம், பேருந்து நிலையம், தோட்டபாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார்.பேருந்துகளில் சென்றவர்க ளிடம், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களிடமும் வாக்குகள் கோரினார். வேலூர் உழவர் சந்தை பகுதியில் நடை பயணமாக சென்று பொது மக்களிடம் வாக்குகள் கோரினார். தொரப்பாடி உழவர் சந்தை யில்  சிறு, குறு வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் நடைபயண மாக  சென்று வாக்கு சேகரித்தார். பேருந்து பயணிகளிடம் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். ஸ்டாலினுடன் திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, மாவட்டச் செயலாளர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களுமான ஆர்.காந்தி, நந்தகுமார், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;