மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது
புதுச்சேரி, ஆக. 12- கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 20 முதல் 26 வரை புதுச்சேரி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளது. இதனை யொட்டி 100 மையங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
புதுச்சேரி பிரதேசத்தில் கொரோனா நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க மாநில அரசு போதிய நடவடிக்கை களை எடுக்கவில்லை. புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவ மனை உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளில் போதிய படுக்கை வசதி களும் மருந்துகளும், இல்லாத கார ணத்தினால் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் வீட்டிலேயே தங்கி யிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வரக் கூடிய சூழலில் அரசு தேவையான படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். மேலும் தனி யார் மருத்துவமனைகளில் உள்ள பெரும்பகுதி படுக்கைகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து மக் களை மீட்பதற்கு தீவிர ஊரடங்கு மட்டுமே தீர்வாகாது. அது மக்களு டைய வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். எனவே பாதுகாப்புகளை உறுதிப்படுத்திக் கொண்டு மக்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிவாரண ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். ஆக. 17 போராட்டம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு 2ஆம் கட்ட நிவா ரணம் வழங்குவதில் சுணக்கம் ஏற் பட்டுள்ளது. குடும்பத்திற்கு மாதம் 7500 ரூபாயும், நபர் ஒருவருக்கு 10 கிலோ அரிசியும் வழங்க வேண்டும். அதற்குத் தேவையான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். மேற் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ஆம் தேதி மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். ஆகஸ்ட் 20 முதல் 26 வரை 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரமும், 26 ஆம் தேதி புதுச்சேரி காரைக்கால் மற்றும் மாஹே உள் ளிட்ட 100 மையங்களில் ஆர்ப்பாட்டங் களும் நடைபெற உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.