ஹவானா:
அமெரிக்காவின் சதி வேலைகளைமுறியடித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு கியூபா ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் உறுப்பு நாடுகளின் குழுவினருக்காக ஒதுக்கப்பட்ட எட்டு இடங்களில் கியூபாவும் ஒன்றாகும். ஐ.நா.சபையின் 88 சதவீத உறுப்பினர்கள் கியூபாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வழக்கம்போல் அமெரிக்காவின் சதி வேலைகள்,நிர்ப்பந்தங்கள் இதில் இருந்தன.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்உறுப்பினராக கியூபாவைத் தேர்ந்தெடுப்பதைப் புறக்கணிப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் எங்கும் செல்லுபடியாகவில்லை. முடிவில் அமெரிக்காவிற்கு தோல்வியே கிடைத்தது.
170 நாடுகளின் வாக்குகளை பெற்று மீண்டும் கியூபா தேர்ந்தெடுக்கப்பட்டது, “ஏகாதிபத்திய பொய்கள் சீர்குலைவுகள் இருந்தபோதிலும், எங்கள் கொள்கைகளில் உறுதியும் திடநம்பிக்கையும் எடுத்துக்காட்டாக திகழும்கியூபாவை உலகம் அங்கீகரிக்கிறது, போற்றுகிறது, மதிக்கிறது. இது ஒரு மகத்தான வெற்றி” என்று கியூபா ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கேனல் பெர்மடெஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் “ புரட்சியின் மனிதநேயப் பணிகளை உயர்த்திப்பிடிப்பதன் மூலம் கொள்கைகளின் அடிப்படையிலான மனித உரிமைகளை கியூபா ஊக்குவித்து வருகிறது” என்றார். வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் பார்ரிலாவும் “கியூபாவின் சாதனைகளை யாராலும் மறைக்க முடியாது” என்று கூறினார். ஐ.நா. உறுப்பு நாடுகளின் 88 சதவீத ஆதரவு கியூப மக்களினத்தின் தனியாட்சிப் பண்புரிமைக்கு கிடைத்த பாராட்டு என்பதோடு அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச விரோதக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், பொருளாதார, வணிக மற்றும் நிதிமுற்றுகைகள் உள்ளிட்ட உரிமை மீறல்களுக்கு எதிரான கியூபா மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியுமாகும்.61 சர்வதேச மனித உரிமை அமைப்புகளில் கியூபா 44-இல் தரப்பினராக பங்கேற்று முறையாக செயலாற்றி வருகிறது. மனித உரிமைகளை அமல் படுத்துவதில் உறுதியான நடவடிக்கை, உலகளாவிய ஒத்துழைப்பு முன்னேற்றங்கள் மூலம் கியூபாபெற்ற சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தின் வெளிப்பாடே இந்த வெற்றி
யாகும்.
(கிராண்மா)