tamilnadu

img

வெப்பச்சலனம்: மழைக்கு வாய்ப்பு

 சென்னை,டிச.17- வெப்பச்சலனம் காரணமாக தமிழகம்  மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி  நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது  முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்ப தாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 3 செ.மீட்டரும், நாகை மாவட்டம் ஆனைக்காரன்சத்திரம், வேதா ரண்யம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு  வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நகரில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சிய சும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சிய சும் வெப்பநிலை பதிவாக வாய்ப்பிருப்ப தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;