சேலம், ஜூலை 25- சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பி.தர்மலிங்கத்தின் நினைவு நாள் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்று பட்ட சேலம் மாவட்டக்குழு செயலாளராக பணியாற்றி மறைந்த தோழர். பி.தர்மலிங்கத் தின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளியன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மேற்கு மாநகரக் குழு அரி யாக்கவுண்டம்பட்டியில் நடைபெற்ற நினை வேந்தலில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் பி.சந்திரன், பி.பாலகிருஷ்ணன், எம். ோதிபாசு, மாநகரக் கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் இடைக்கமிட்டி சார்பில் நடை பெற்ற நிகழ்வில் தாலுகா செயலாளர் எம்.முரு கேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல், பெத்தநாயக்கன்பாளையம், ரெட்டி பட்டி, சேலம் உருக்காலை கிளைகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.