tamilnadu

img

தோழர் இரா.ஜோதிராம் முதலாமாண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

மதுரை, டிச. 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை வாய்ந்த  தோழர் இரா. ஜோதி ராம் முதலாம் ஆண்டு நினைவுதினம் டிசம்பர் 30 திங்களன்று கடைப் பிடிக்கப்பட்டது. மதுரை மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலா ளர் இரா. விஜயராஜன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில்  மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் பி.ராதா, அ.ரமேஷ், ம.பாலசுப்பிர மணியம், பகுதிகுழுச் செயலாளர்கள் டி.குமரவேல், ஜெ.லெனின்  மற்றும் வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

;