தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டிஇருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி பந்தலூரில் 11 செமீ மழையும், கோவை வால்பாறை வட்டாச்சியர் அலுவலகம் 9 செமீ, நீலகிரி தேவலா மற்றும் பிரேயர் எஸ்டேட் பகுதியில் தலா 8 செமீ, கோவை சின்னக்கல்லார், புதுக்கோட்டை அரிமளம், நீலகிரி அவலாஞ்சி தலா 7செமீ, கோவை வால்பாறை மற்றும் சின்கோனா தலா 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.