tamilnadu

img

வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம்

இந்திய  வங்கி  ஊழியர்  சம்மேளனம்  ஆதரவு

சென்னை, செப்.21- பொதுத்துறை வங்கிகளின் இணைப்பை கைவிடக்கோரி  செப்டம்  பர் 26,27ஆகிய நாட்களில் 4 அதிகாரி கள் சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தி.தமிழரசு, பொதுச்  செயலாளர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

2019ஆகஸ்ட் 30ஆம் தேதி நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன்  10 பொதுத்  துறை வங்கிகளை இணைத்து 4 வங்கி களாக மாற்றுவதற் கான அறிவிப்பை வெளியிட்டார். பொதுத்துறை வங்கி கள் இணைப்பு என்பது பெரு நிறுவனங்க ளுக்கு சாதகமாகவும், சாமானிய மக்க ளுக்கு எதிராகவுமான நடவடிக்கையாகும். இதன் விளைவாக பல்லாயிரக்க ணக்கான கிளைகள் மூடப்படும். பெரும்  கடன் அதிகரிக்கும். சிறு கடன்கள் குறைக்கப்படும். சாமானிய மக்கள்  மீதான அபராதத் தொகை கூட்டப்படும். இதற்கு முன்பு நடைபெற்ற ஸ்டேட் வங்கி  இணைப்பின் அனுபவமும் இதுதான். இந்த இணைப்பு வங்கிகள் தனி யார்மயத்தின் முதல் படியாகும். ஸ்டேட்  வங்கி, இணைப்பிற்கு பிறகு ஜியோ வங்கியின் இளைய பங்காளியாக மாறி யுள்ளது. பெரு நிறுவனங்களின் வராக்  கடனை முழுமையாக வசூலிப்பதற்கு பதிலாக ஐபிசி சட்டத்தின் மூலமாக அவற்றின் பெரும் பகுதி தள்ளுபடி செய்  யப்படுகிறது. வங்கிகளில் போதுமான ஆட்கள் நியமனம் இல்லை. இதன் கார ணமாக சிறு கடனாளிகளுக்கான கடன்  மறுக்கப்படுகிறது. 

எனவே வங்கிகள் இணைப்பை கைவிடக் கோரியும், பெரு நிறுவனங்க ளிடமிருந்து வராக் கடனை கறாராக வசூ லிக்க வலியுறுத்தியும், சாமானிய வாடிக்கையாளர் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையை கைவிடக் வேண்  டியும், வைப்புகளுக்கான வட்டி விகி தத்தை உயர்த்தக் கோரியும், வங்கி களின் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமனம் கோரியும் அக்  டோபர் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை யன்று நாடு முழுவதிலும் உள்ள வங்கி  ஊழியர்கள்  பிஇஎப்ஐ மற்றும் ஏஐபி இஏ சங்கங்களின் அறைகூவலை ஏற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். செப்டம்பர் மாதம் 26, 27ஆகிய இரு  நாட்கள் 4 அதிகாரிகள் சங்கங்கள் இதே  கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். போரா டும் அதிகாரிகளுக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தனது சகோதர ஆதரவை தெரிவிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.