tamilnadu

img

முதல்வர் நிவாரண நிதிக்கு  இதுவரை  ரூ.36 கோடி நன்கொடை

சென்னை, ஏப்.2- கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும்  நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதல மைச்சரின், பொது நிவாரண நிதிக்கு இதுவரை 36 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்  மற்றும், சக்தி மசாலா நிறுவனம் தலா 5 கோடி  ரூபாயும், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் சிம்சன்ஸ்  நிறுவனம் தலா 2 கோடி ரூபாயும் மற்றும் சண்முகா நிறுவனம் 1 கோடியே 25 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எஸ்.ஆர்.எம் மிஸ்ட் நிறுவனம் 1  கோடியே 15 லட்சமும், தமிழக ஆளுநர் அலுவல கம் மற்றும் திமுக அறக்கட்டளை சார்பில் தலா 1  கோடி ரூபாயும் நன்கொடை அளிக்கப் பட்டுள்ளது.