மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவி
திருவள்ளூர், மே 2- கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நமது காலத்திலும் நமது முன்னோர்கள் காலத்திலும் இதுபோன்ற நீடித்த ஒரு ஊர டங்கை சமூகம் சந்தித்ததில்லை. ஊரடங்கு 40 நாட்களை கடந்த நிலையில் லட்ச்கக்க ணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து எதிர்கால வாழ்வை எண்ணி விடை தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அரங்கங்களின் சார்பில் 11,436 குடும்பங்களுக்கு 32 லட்ச ரூபாய் மதிப்பில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பொன்னேரியில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மதன் தலைமையில் தினசரி 80 முதல் 100 பேருக்கு என கடந்த 28 நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 9 பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்தினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள னர். மேலும் வாலிபர் சங்கத் தோழர்கள் மட்டுமே 1 லட்சத்து 38 ஆயிரத்து 250 ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர்.
அதேபோல் சிஐடியு சார்பில் அரிசி 60,000 ஆயிரம் மதிப்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. சோழவரம் கே.கேநகர் பகுதியில் வசிக்கும் 10 அப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்களும், 287 ஆட்டோ தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களும் வழங்கப் பட்டுள்ளன. மாவட்டத்தில் தொழிற்சங்கத்தின் சார்பில் 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப் பட்டுள்ளன.
ஊரடங்கில் மிகவும் பாதிப்புக்குள்ளான முறைசாரா பழங்குடி மக்களுக்கு பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் 28 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட் கள் வழங்கப்பட்டுள்ளன. எல்ஐசி ஊழியர் சங்கம் சார்பில் 25 நெசவுத் தொழிலாளர் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவியல் அரங்கம் சார்பில் ஆர்.கே. பேட்டை பகுதியில் 300 நலிவுற்ற பழங்குடி விசைத்தறி நெசவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டுள்ளன. சோழவரம் ஞாயிறு ஊராட்சியில் 1,350 குடும்பங்க ளுக்கும், தூய்மைக் காவலர், தூய்மைப் பணியாளர் டேங்க் ஆப்ரேட்டர் 28 பேருக்கும், மாற்றுத் திறனாளி 70 பேருக்கும் 8 லட்ச ரூபாய் மதிப்பிலும், ஊத்துக்கோட்டை திருக்கண்ட லம் பகுதியில் 1,200 குடும்பங்களுக்கும், மாற்றுத் திறனாளி 50 பேருக்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், மாளந்தூர் ஊராட்சியில் நலிவுற்ற 50 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விவசாயிகள் சங்கம் சார்பில் கும்மிடிப்பூண்டி வழுதிகை மேடு பகுதியில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிவராணப் பொருட்கள் வழங்கப்பட்டுள் ளன. மாதர்சங்கம் சார்பில் ஆரணியில் 100 குடும்பங்களுக்கு 12,000 ரூபாய் மதிப்பில் அரிசியும, தமிழ்நாடு அறிவியல் அரங்கம் சார்பில் பழவேற்காடு, பொன்னேரி, சோழவரம் ஆகிய பகுதிகளில் 215 குடும்பங்களுக்கு 1,60,000 ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருத்தணி பகுதியில் வசிக்கும் 363 தலித் பழங்குடி முறை சாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுள்ளன. பொன்னேரி பகுதியில் வசிக்கும் 48 முறைசாரா தொழிலா ளர்களுக்கு இலவம்பேடு கிளை சார்பில் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசியும், பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் 15 ஏழை குடும்பங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களும், சோழவரம் பகுதியில் பாடியநல்லூர் ஓய்வுபெற்ற தோழர்கள் சார்பில் 3,000 ரூபாய் மதிப்பில் 5 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாலிபர் சங்கம் சார்பில் திருவள்ளூர், பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு 116 பேர் ரத்ததானம் செய்துள்ளனர். கடந்த 30 ஆம் தேதி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் 11,436 குடும்பங்களுக்கு 32 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் செய்யப் பட்டுள்ளன. தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தெரிவித்தார்.