tamilnadu

img

தெற்கு ரயில்வேக்கு 3 விருதுகள்

சென்னை,டிச.7- நாட்டிலேயே, மின்சார சேமிப்பில் சிறந்து  விளங்கியதற்காக, தெற்கு ரயில்வே 3 விருது களை பெற்றுள்ளது.  நாடு முழுவதும் மின் ஆற்றலை சேமிப்ப தில், சிறந்து விளங்கும் நிறுவனங்களை, பல்வேறு பிரிவின் கீழ், வகைப்படுத்தி, ‘எரி சக்தி செயல்திறன் அமைப்பு’ விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்த வகையில், கடந்த 2018-19 ஆம் ஆண்டில், மின் ஆற்றலை சேமிப்பதில், தெற்கு ரயில்வேயின், மின்சாரப் பிரிவு, மின்  ஆற்றலை சேமிப்பதில், சிறப்பாக செயல்பட்ட தற்காக மூன்று விருதுகளை பெற்றுள்ளது. ரயில்வே போக்குவரத்து மண்டலங்க ளுக்கு இடையிலான பிரிவிலும், மின் ஆற்  றலை சேமிப்பதில், சிறந்து விளங்குவ தற்கான சான்றிதழ், தெற்கு ரயில்வே தலை மையகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ரயில்வே பள்ளிகள் பிரிவில், ஈரோடு ரயில்வே  பள்ளிக்கு முதல் பரிசுடன், விருதும், போத்த னூர் ரயில்வே பள்ளி தகுதிச் சான்றிதழும் பெற்றிருக்கிறது.