tamilnadu

காலவதியான மாத்திரைகள்: நோயாளிகள் அதிர்ச்சி

ராணிப்பேட்டை, ஜூன் 20- ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் 4ஆவது வார்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் செவிலியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  சுகாதாரத்துறை அதிகாரிகள், அவருடன் தொடர்பில் இருந்த ஐந்து வீடுகளையும், அந்தப் பகுதியையும் தனிமைப்படுத்தினர். பின்னர், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து (ஜிங்க்) மாத்திரைகள்  சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டன. அந்த மாத்திரை காலாவதியாகி இருப்பதைக் கண்டு நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த  சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தாங்கள் வழங்கிய சத்து மாத்திரைகளை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.