புதுச்சேரி,ஜன.30- புதுச்சேரி ஏம்பலம் திருவள்ளு வர் நகரைச் சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வில்லியனூர் புறவழிச் சாலையில் பேக்கரி கடை நடத்தி வந்த இவர், நித்தியானந்தாவின் சீடராக இருந்து வந்தார். கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ஏம்பலத்தில் செயல் பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரம கிளை நிர்வாகியாக இருந்தார். அதன் பிறகு அதில் இருந்து விலகி பேக் கரி தொழிலில் ஈடுபட்டார்.
ஏம்பலம் அருகே செம்பி யம்பாளையத்தில் உள்ள தனது பெரியம்மா வசந்தாவிடம் ரூ. 2 லட்சம் பணம் வாங்கி வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு காரில் சென்றார். ஆனால், வெகுநேரமாகி யும் வீடு திரும்ப வில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் வசந்தாவிடம் போனில் பேசி கேட்ட போது, வஜ்ரவேல் பணத்தை வாங் கிக் கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வஜ்ர வேலுவை பல இடங்களில் தேடினர். ஆனால், எங்கும் இல்லை. இதை யடுத்து கரிக்கலாம் பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையே வஜ்ரவேலுவின் கார் பாகூர் அருகே குருவிநத்தம் சமுதாயநலக் கூடம் அருகில் கேட்பாரற்று நிற்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. காவ லர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காரை திறந்து பார்த்தனர். காரின் பின் இருக்கையில் வஜ்ரவேல் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்ச மும் மாயமாகியிருந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.