tamilnadu

img

மோடி ‘போட்ட’ பணத்தை எடுத்து செலவிட்ட முதல் நபர்

ம.பி. மாநிலத்தில் ‘கண்டு’பிடிக்கப்பட்டார்

போபால், நவ.23- மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டம் ஆலம்பூரிலுள்ள எஸ்பிஐ (SBI) வங்கிக் கிளையில், ரோனி கிரா மத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் என்பவர் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், அவரது வங்கிக் கணக்கில் மாதம் மாதம் மர்மமான முறையில் பணம் தானாக வந்துள்ளது. இவ்வாறு 6 மாதம் தொடர்ச்சியாக வந்த பணத்தில் ரூ. 89 ஆயிரத்தை எடுத்து, ஹூக்கும் சிங்கும் தாராளமாக செலவிட்டுள்ளார். இந்நிலையில்தான், இவ்வாறு வந்த பணம், அதே வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கும், ரூராய் கிரா மத்தைச் சேர்ந்த மற்றொரு ஹூக்கும் சிங் என்பவருக்கு சேர வேண்டியது என்பது தெரியவந்துள்ளது.

ஆலம்பூர் எஸ்பிஐ கிளைமேலாள ரான ராஜேஷ் சோன்கர், இரண்டு ஹூக் கும் சிங்குகளுக்கும் ஒரே மாதிரியான வங்கி கணக்கு எண்களை வழங்கியி ருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, ரோனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங்கிடம், வங்கி அதி காரிகள் சென்று விசாரித்துள்ளனர். அப் போது, பணத்தை எடுத்து செலவழித் ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், தனது பணம் என்று கருதியே செலவிட்டதாக கூறியுள்ளார். உடனே, அது எவ்வாறு யாரும் போடாமலேயே உங்கள் கணக்கில் பணம் வரும்? என்று வங்கி அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு நீங்கள் கேட்பது சரிதான், ஆனால், “தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி மோடிஜிதான் எனது கணக் கில் பணத்தை போட்டிருக்கிறார் என்று நினைத்து விட்டேன்” என்று மிகச் சாதார ணமாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  மேலும், யார் யாரை ஏமாற்றியது, மோடியால் ஹூக்கும் சிங் ஏமாற்றப் பட்டாரா, இல்லை மோடியின் பெயரைச் சொல்லி ஹூக்கும் சிங் நம்மை ஏமாற்று கிறாரா? என்று புரியாமல் குழப்பத்துட னேயே அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.