tamilnadu

img

 பேலு கான் வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவு?

அரியானாவைச்  சேர்ந்த  பேலு கான் (55 வயது) ஜெய்ப்பூர் சந்தையில் பசுக்களை வாங்கிக் கொண்டு  ஏப்ரல் 1, 2017 அன்று தன் சொந்த ஊரான அரியானாவின் நூ மாவட்டத்துக்கு வரும் போது பெரோர் என்ற இடத்தில் பசுக்குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.  இதையடுத்து இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பலனில்லாமல் அவர்  உயிரிழந்தார். 
இதையடுத்து ராஜஸ்தான் போலீஸ் இதனை கொலை வழக்காகப் பதிவு செய்தது. பசுக்கடத்தல் புகாரையும் விசாரித்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு நாடுமுழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெலுகான் மகன், குற்றவாளிகள் யாரும் கொல்லவில்லை என்றால் என் தந்தையை கொன்றது யார்? என்று கேள்வி எழுப்பி  உள்ளார் பெலுகானின் இளைய மகன் இர்ஷாத். தீர்ப்பு வருத்தத்தை அளிக்கிறது. இந்த நாட்டில் வாழ எங்களுக்கு உரிமையில்லாததால், நாங்கள் சாகத்தான் வேண்டும் என்றே இந்த தருணத்தில் தோன்றுகிறது என்றும் கூறி உள்ளார்.
நாங்கள் கொடுத்த வீடியோ ஆதாரத்தையும் ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டதாக தெரிவித்தவர் தற்போது நாங்கள் என்ன செய்வது?  வீடியோவில் எனது தந்தையை அந்த கும்பல் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது. அது பொய் என்றால், எனது தந்தை எப்படி இறந்தார்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறியவர், போலீஸார் ஒருதலைப்பட்ச மாக செயல்பட்டுள்ளனர். நிறைய சாட்சிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். ஆனால், இந்த சம்பவம் 3 அல்லது 4 நாட்களுக்கு முன் நடந்தது அல்ல. 2 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம். அப்படி இருக்கையில், குற்றவாளிகளின் முகத்தை அவர்கள் எவ்வாறு நினைவில் கொள்ள முடியும் என்று தெரிவித்தவர், இந்த தீர்ப்பை எதிர்த்து,  நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று கூறினார். 
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்கெலாட் இந்த வழக்கை மறுவிசாரணை  செய்ய  உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


 

;