ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில், ஆழ்துளைக் கிணறு ஒன்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனை 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் சிபா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், தனது வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்த அவனின் பெற்றோர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் மண்ணை தோண்டி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பின்பு 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவனை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.