ஸ்ரீநகர், டிச.17- ஜம்மு- காஷ்மீரின் எல்லைப் பகுதியில் ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட சுந்தர்பேனி எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு நிலைகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் திங்களன்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்திற்கு உட்பட்ட குரிஷ் எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்.