tamilnadu

img

பொருளாதார பிரச்சனைகளை திசைதிருப்பவே சிஏஏ- என்ஆர்சி... ‘நவ நிர்மாண் சேனா’ ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு

மும்பை:
குடியுரிமைச் சட்டம் மற்றும் குடியுரிமைப் பதிவேடுகள், இந்தியப்பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பியுள்ள தாக நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 135 கோடி மக்கள்வசித்து வருகின்றனர். மேலும் மக்களை ஏற்க முடியாத நிலையில் நாம்உள்ளோம். எனவே அகதிகளை ஏற்றுஅவர்களுக்கும் குடியுரிமை அளிப்பது நாட்டுக்கு அதிகப்படியான சுமை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அரசு முதலில் தனது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தற்போது இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. மேலும் வீழ்ச்சியடைய நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், அதைச் சீர்சய்ய அரசுஎவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், குடியுரிமைத் சட்டத் திருத்தம், தேசியக் குடியுரிமைப் பதிவேடு போன்றவற்றை மத்திய அரசு அறிவிக்கிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா கிளப்பியுள்ள இந்த குடியுரிமை விவகாரங்களால் நாட்டில் தற்போதுள்ள பொருளாதாரச் சீரழிவை பொதுமக்கள் மறந்துள்ளனர். இதற்காகவே அமித்ஷா இதுபோன்ற திட்டங்களை அறிவித்துள்ளார். உண்மையிலேயே அவரை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால், தனது ‘தந்திர’ நடவடிக்கைகளால் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, தனதுஅரசின் இயலாமையை சாமர்த்திய மாக மறைத்துள்ளார்.மக்களுக்கு இதுகுறித்தெல்லாம் தெரியும். ஆனால், மக்களின் கைகள்கட்டப்பட்டுள்ளதால், சரியான பதிலடிகொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறு ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

;