tamilnadu

img

இந்திய மல்யுத்த வீரர் : 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்திய மல்யுத்த வீரர் தீபக் பூனியா டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த தீபக் பூனியா, 86 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிபெற்ற பூனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலமாக 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 4-வது இந்திய வீரர் ஆனார்
 

;