tamilnadu

img

“நமது பிரதிநிதித்துவம் குறையக் கூடாது”

“நமது பிரதிநிதித்துவம் குறையக் கூடாது”

நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த முதல்வர்கள்  - அரசியல் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக் கைக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்க  உரையாற்றினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் அப்போது, “இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் இருக் கும் - ஆட்சி செய்யும் ஒரு கட்சியின்  அழைப்பினை ஏற்று இத்தனை இயக்கங்கள் - கட்சிகள் வந்திருப் பது இக்கூட்டத்தின் மாபெரும் சிறப்பு! இந்திய ஜனநாயகத்தைக் காக்க நாம் அனைவரும் ஓரணி யில் திரண்டிருக்கிறோம் என்பதை  இந்தியாவுக்கு உணர்த்துவதாக உங்களது வருகை அமைந்திருக் கிறது,” என்று முதலமைச்சர் தெரி வித்தார். மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு தண்டனையா? “வரவிருக்கின்ற - அல்லது எதிர்காலத்தில் நடைபெறுகின்ற சென்சஸ் அடிப்படையில் மேற் கொள்ளவிருக்கும், மக்கள் தொகை  அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பு, நம்மைப் போன்ற மாநி லங்களை வெகுவாக பாதிக்கப்  போகிறது,” என்று குறிப்பிட்ட முத லமைச்சர், “மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப்  போன்ற மாநிலங்கள், அதன் காரண மாக நாடாளுமன்றத் தொகுதி களின் எண்ணிக்கையில் நமது பிரதி நிதித்துவத்தை அதிகம் இழக்க நேரிடும்” என்று எச்சரித்தார். பிரதிநிதித்துவம் குறைவதால் வலிமை இழப்பு “இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது.  ஆனால் நீதிக்கான அவர்களின்  குரல்கள் புறக்கணிக்கப்படு கின்றன. ஏனென்றால் நாட்டின் கவ னத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசி யல் வலிமை இல்லை,” என்று  சுட்டிக்காட்டிய அவர், “நாடாளு மன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை  குறைவது அல்லது நமது பிரதிநிதித் துவம் குறைவது என்பதை நம்மு டைய அரசியல் வலிமையை குறைப் பதாகத்தான் பார்க்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார். அதிகாரம், உரிமைகள்  மற்றும் நலன்கள் பாதிப்பு “இது வெறும் எண்ணிக்கை யைப் பற்றியது மட்டுமல்ல - இது  நமது அதிகாரம், நமது உரிமைகள்  மற்றும் நமது எதிர்காலத்தின் நலன் களைப் பற்றியது. பிரதிநிதித்து வம் குறைந்து வருவதால், நமது மாநிலங்கள் நமக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு கூட போ ராட வேண்டி வரும்,” என்று முதல மைச்சர் கவலை தெரிவித்தார். 8 இடங்களைத் தமிழ்நாடு இழக்கும்  “தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டால், தமிழ் நாடு 8 இடங்களை இழக்கும். நாடாளுமன்றத்தின் மொத்த இடங் களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டால், தமிழ்நாடு 12 இடங்களை இழக்க நேரிடும்,” என்று முதல மைச்சர் எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடியே ஒப்புக்கொண்ட உண்மை 2023-ஆம் ஆண்டு தெலுங் கானாவில் பரப்புரை செய்தபோது, “காங்கிரஸ் கட்சி சொல்வதைப் போல மக்கள் தொகையின் அடிப்ப டையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் 100 தொகுதி களை இழக்க நேரிடும்,” என்று பிர தமர் மோடி கூறியதை நினைவு படுத்திய முதலமைச்சர், “தொகுதி களின் எண்ணிக்கை குறையும் என்பதை அவரே ஒப்புக் கொண்டு உள்ளார்,” என்றார். ‘நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கே கூட்டு நடவடிக்கைக் குழு’ “நாம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கு ஆதரவானவர்கள்,” என்று தெரி வித்த முதலமைச்சர், இந்தக் குழு வுக்கு ‘நியாயமான தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டு நடவ டிக்கைக் குழு’ என்று பெயரிட முன்மொழிந்தார். தொடர் செயல்பாடுகள்- போராட்டம் அவசியம் “ஒரு நாள் நாம் கூடி - ஆலோ சித்து – தீர்மானம் நிறைவேற்று வதில் மட்டுமே இந்தப் போராட் டம் முடிவடைந்து விடாது. உரி மையை நிலைநாட்டிட தொடர்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமா கிறது,” என்று வலியுறுத்திய முதல மைச்சர், அரசியல் மற்றும் சட்ட  நடவடிக்கைகளை வரையறுப் பதற்காக வல்லுநர்களின் குழுவை அமைக்க முன்மொழிந்தார். “எந்தச் சூழலிலும் நமது பிரதி நிதித்துவம் குறையக் கூடாது; குறையவிடக் கூடாது என்ற உறுதி யோடு போராடுவோம். நியாய மான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம்,” என்று தனது உரையை நிறைவு செய்தார் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின்.

குறுகிய அரசியல் ஆதாயத்திற்காகவே தொகுதி மறுசீரமைப்பு சூழ்ச்சி! கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவ டிக்கைக் குழு கூட்டத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசினார். என்ன கட்டாயம் வந்து விட்டது? அப்போது, “மக்களவைத் தொகுதிகள் மறுசீர மைப்பு என்ற கத்தி நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு எந்த ஆலோசனையும் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் நடவடிக்கை எந்தவொரு அரசியலமைப்பு கொள்கையாலும் அல்லது எந்தவொரு ஜனநாயக கட்டாயத்தாலும் எடுக்கப்படவில்லை. ஆனால் குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் மேற்கொள் ளும் நடவடிக்கையாகும்” என்று தெரிவித்தார். ஆட்சியைத் தக்கவைக்கவே  மறுசீரமைப்பு சூழ்ச்சி  “மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு  மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு மேற்கொள்ளப் பட்டால், வடமாநிலங்களின் இடங்களின் எண்ணிக்கை  மிகப் பெரிய அளவில் உயர்வதற்கு வழிவகுக்கும்.

அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங் களின் பிரதிநிதித்துவம் கணிசமாக குறையும் நிலை  ஏற்படும். வடக்கில் அதிக செல்வாக்கைக் கொண்டிருப் பதால் இது பாஜகவுக்குப் பலன் தரும். இதற்காகவே அவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்” என்றும் பாஜகவின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார். தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் “மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே மக்கள வைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், மக்கள்தொகையை குறைத்து வருகிறோம் என்ப தால் கேரளம் மற்றும் பிற தென் மாநிலங்கள் பாதிக்கப் படும். இது தென்னிந்தியாவிற்கு இழைக்கப்படும் அநீதி யாகும். அதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள  மாட்டோம்.  ஏற்கனவே நம் கலாச்சாரத்தில், நம் மொழிக் கொள் கையிலும் தலையிடும் ஒன்றிய பாஜக தற்போது நம் பிரதிநிதித்துவத்திலும் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும் ஜனநாயகக் கட்டமைப்பையும் பல வீனமாக்கி விடும். பிரதிநிதித்துவம் - வருவாய்  இரண்டும் பறிபோகும் நமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மேலும் குறைக்கப்பட்டால், நாட்டின் வருவாயில் நமக்கான ஒதுக்கீடு மேலும் குறைக்கப்பட்டு விடும். இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தான், கேரளா,  தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநி லங்கள் இப்போது ஒன்றுபட்டு ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன” என்றார். “பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என் பதை ஒன்றிய பாஜக அரசு உணர வேண்டும் என்றும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங் களுடன் அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என்றும் கூறிய அவர், தொகுதி மறுசீர மைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது கடமை யும் ஒன்றிய அரசுக்கு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார். ஒருங்கிணைந்து எதிர்ப்போம் மேலும், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலி னின் அழைப்பின்பேரில், கூட்டு நடவடிக்கைக் குழுவை  அமைப்பதன் மூலம் நமது ஒருங்கிணைந்த எதிர்ப்பின்  தொடக்கத்தை வெளிப்படுத்த நாம் இங்கு கூடியு உள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங் களை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசின் இது போன்ற நடவடிக்கைகளை இனியும் நாம் அனு மதிக்கக் கூடாது” எனவும் வலியுறுத்தினார்.