tamilnadu

‘தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பள்ளிக்குள் அனுமதியில்லை’

சண்டிகர்,ஜன.15- நாடு முழுவதும் 15-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது வரை தடுப்பூசி போட்டுக் கொண்ட சிறார்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது.  இந்த நிலையில், அரியா னாவில் 15-18 வயது வரம்பிலான சிறுவர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் பள்ளிக்கு வர அனுமதி யில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள் ளார். கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அதிகாரிக ளுடன் ஆலோசனை நடத்தும் போது இந்த அறிவுறுத்தலை அனில் விஜ் விடுத்துள்ளார்.  பள்ளிகள் மீண்டும் திறக் கப்படும் போது “தடுப்பூசி போட்டுக்கொண்ட மாண வர்களுக்கு மட்டுமே பள்ளிக்குள் வர அனுமதி அளிக்கப்படும்” என அனில் விஜ் கூறியதாக அம்மாநில அரசு விடுத்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் தற்போது அரியானாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.