‘வந்தேவிட்டது தொகுதி மறுவரையறை ஆபத்து!’
சென்னை, ஜூன் 6 - “2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண் டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்கு குறைந்துவிடும். அதிமுக போன்ற அடிமைத் துரோகிகள் தங்க ளின் சுயநலத்துக்காக பாஜக முன் மண்டியிட்டா லும், திமுகவின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும். நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்ப தாவது: மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக் கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலா னவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. ஒன்றிய பாஜக அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல் படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை களைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. அதேவேளையில், மக்கள்தொகை கட்டுப் பாட்டைப் பல பத்தாண்டுகளாக காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத் தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது. இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித் திருந்தேன். தற்போது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக எப்படி இந்தக் கைவரிசை யைக் காட்டப் போகிறது என்பதை விளக்க மாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல; தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களை யும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது. 1971 ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள் தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்கு சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பாஜக நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும். தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்ப டும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் இவை தெளி வற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வ தைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத் தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியல மைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங் கள் என்பதே. பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் லட்ச ணம் புரிந்துவிடும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது; தேர்தலும் நடை பெற்றது. உச்சநீதிமன்றத்திலேயே உறுதி யளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு-காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியவான் களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக் கிறோம். 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற் கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்து விடும். அதிமுக போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பாஜக முன் மண்டியிட்டாலும், திமுகவின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும். நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத் துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாடு போரா டும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.