tamilnadu

img

‘மக்களிடம் செல்வோம், மக்கள் ஆதரவைப் பெறுவோம்!’

‘மக்களிடம் செல்வோம்,  மக்கள் ஆதரவைப் பெறுவோம்!’

மதுரை பொதுக்கூட்டத்தில் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி அறைகூவல்

மதுரை, ஏப். 7 - “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சுய பரிசோதனை செய்து பலவீனங்களை களைந்து, மக்களிடம் கற்றுக் கொண்டு அவர்கள் ஆதரவைப் பெறுவோம்” என்று கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாட்டின் நிறைவாக தோழர் என். சங்கரய்யா திடலில், லட்சக்கணக்கானோர் செங் கடலென திரண்டு இருந்த பொதுக்கூட்டத்தில் கட்சி யின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி சிறப்புரை யாற்றினார்.  வைகை

வைகையைச் செங்கடலாக மாற்றிய தோழர்கள் “இன்று வைகை நதி, செங்கடல் ஆகி இருக்கிறது; வைகை நதி, மனிதக்கடல் ஆகியிருக்கிறது; கேரளத்தி லிருந்து ஒரு பகுதி மலையாளிகளும், தமிழகத்தின் சகோதர, சகோதரிகளும் இங்கு திரண்டு இருக்கி றீர்கள்” என்று கூறி அவர் தனது பேச்சைத் துவங்கி னார். “எனக்கு 14 வயதாக இருக்கும் பொழுது தமிழ கத்தின் கீழ்வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல் லப்பட்டனர். கஷ்டப்படும் தலித் தொழிலாளர்கள் கடுமையான தாக்குதலை சந்தித்தனர். நியாயமான கூலி கிடையாது, பொதுக்குளத்தில் தண்ணீர் எடுத்துக் குடிக்கக் கூடாது என இருந்த அந்த மக்கள், செங்கொடி யின் கீழ் ஒன்று சேர்ந்தனர். நிலப்பிரபுக்களின் சாதி  ஒடுக்கு முறைக்கு எதிராகவும், வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகவும் போராடினர்.

வெண்மணித் தியாகிகளின் ரத்தத்தில் கலந்த செங்கொடி

ஆனால் நிலப்பிரபுக்கள் அவர்களது கோரிக்கை யை ஏற்கவில்லை. செங்கொடியை கீழே இறக்குங் கள், உங்களுக்கு கூலி உயர்வு தருகிறோம் என்று சொல்லி சதி செய்தார்கள். ‘எங்கள் உயிரே போனா லும் செங்கொடியை இறக்க மாட்டோம்; சங்கத்தை விட்டு வரமாட்டோம்’ என்று அந்த மக்கள் உறுதி யோடு போராடினர்.  இதனால் ஆத்திரமடைந்த நிலப்பிரபுக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 44 பேரை எரித்துக் கொன்றார்கள். அவர்களது ரத்தத்தில் கலந்த செங்கொடிதான், உ. வாசுகி கொடுத்து, ஏ.கே. பத்மநாபன் பெற்றுக் கொண்ட அந்தக் கொடி தான் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் ஏற்றப் பட்டுள்ளது” என்றார்.

வலுவான கட்சியாக உருவாக்குவோம்

“வெண்மணித் தியாகிகள் இதயத்தோடு உயர்த்திப் பிடித்த அந்த செங்கொடியை, நாம் மென்மேலும் உயர்த்திப் பிடிப்போம். செங்கொடி யை உயர்த்திப் பிடித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை வலுவான கட்சியாக மாற்றுவோம் என்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, எம்.ஏ. பேபி பேசிக் கொண்டிருந்த போது, மழை பெய்யத் தொடங்கியது. அப்போது, “எனக்கு முன்னால் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மழைக்காக பேச்சை நிறுத்த வேண்டும் அல்லது தொடர்ந்து பேச வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், “பேச்சை நிறுத்தினால், அது சின்ன துன்பத் துக்கு கூட தாக்குப்பிடிக்காமல் கூட்டத்தை முடித்துக் கொண்டார்கள் என்று தவறான செய்தியாக போய் விடும். நான் பாரதியின் பாடலை நினைவு கூர்கி றேன்... அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்ப தில்லையே, உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதி லும், அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் என்பது  இல்லையே!!” என்று முழங்கி பேபி தனது பேச்சைத் தொடர்ந்தார்.  

உலகின் 25 சதவிகித மக்கள் செங்கொடிப் பாதையில்...

“இருப்பினும் மோசமான, கடுமையான மழை வரும் என்று வானிலை அறிக்கை கூறுவதையும் கவ னத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.  “இடதுசாரிகளுக்கு, குறிப்பாக கம்யூனிஸ்டுக ளுக்கு தற்போதைய சூழலில் ‘மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இல்லை’ எனச் சொல்கிறார்கள். அமெ ரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவர் ஐரோப்பிய நாடுகள், லத்தீன் அமெரிக்க  மற்றும் ஆசிய நாடுகளோடு முரண்பட்டு வர்த்தகத் தாக்குதலை நடத்தி வருகிறார்.  மற்றொருபுறம் உலகின் பல பகுதிகளில் இடது சாரி, முற்போக்கு சக்திகள் முன்னேறி வருகின்றன. கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு தொடர்ந்து ஆட்சியில் வெற்றிபெற்று வரலாறு படைக்கிறது.  குறிப்பாக, உலகில் 25 சதவிகிதமான மக்கள் ஜனநாயகம், சோசலிசத்திற்கான பாதையில் போராடி வருகின்றனர். கியூபா, வடகொரியா, லாவோஸ், சீனா, வியட்நாம் என 20 சதவிகித மக்கள் சோசலிசத்தின் கீழும், லத்தீன் அமெரிக்க மக்களையும் சேர்த்தால் 25 சதவிகிதமான மக்கள் இந்தப் பாதையில் அணி திரண்டு உள்ளனர். அதாவது 100 பேரில் 25 பேர் நேர டியாக செங்கொடியின் கீழ் அல்லது செங்கொடி நோக்கி வருகிறார்கள்.

இலங்கை, நேபாளத்திலும் இடதுசாரிகள் ஆட்சி

இந்த தமிழ்நாட்டிற்கு அருகே உள்ள இலங்கை யில், ‘தேசிய மக்கள் சக்தி’ கூட்டணி என்ற மார்க்சியப் பாதையில் அணிவகுக்கும் அனுரகுமார திஸா நாயக்க வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் இந்தியா வின் வடக்கில் உள்ள நேபாளத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் பிரதமராக உள்ளார். இந்தியாவின் வடக்கிலும், தெற்கிலும் இடது சாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். இடதுசாரிகள் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

இந்தியாவில் பாசிச ஆட்சியாளர்களை வீழ்த்துவோம்  

இந்தியாவில் நாம் சில வெற்றிகளைப் பெற்றா லும் கூட தேசிய அளவில் பாசிச சக்திகள் அதிகாரத்தில் உள்ளனர். இந்த அரசு ஜனநாயகமற்ற முறையில் செயல்படுகின்றது. இந்நிலையில் நமக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. நாம் நமது பலவீனங்களை ஆய்வுசெய்து, சரி செய்து கொண்டு மக்களிடம் தொடர்பு கொள்வோம். மக்களுக்கு கற்றுக் கொ டுப்போம். மக்களிடமிருந்து கற்றுக் கொள்வோம். நாம் மக்கள் ஆதரவை பெற வேண்டும்.

 மே.20 பொது வேலைநிறுத்தம்

மோடி அரசினுடைய தொழிலாளர் விரோத- கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கை களுக்கு எதிராக வரும் மே 20 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இது சிஐடியு, ஏஐடியுசி என தனியாக நடத்தும் போராட்டம் அல்ல. அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்தும் இந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆத ரிக்கிறது. இந்தப் போராட்டத்தை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். நமது கட்சி தோழர்கள் இதற்காக பணியாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தனது உரையை நிறைவு செய்தார். அவரது உரையை மூத்த தலைவர் எஸ்.நூர் முகமது தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார்.