tamilnadu

img

தஞ்சையில் வாலிபர் சங்க மாநில பயிலரங்கம்

தஞ்சாவூர், நவ.9 -  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், தஞ்சாவூரில் மாநிலப் பயிலரங்கம் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் தலைமை யில் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.அறிவழகன் வரவேற்றார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னத்துரை பயிலரங்கத்தை துவக்கி வைத்துப் பேசினார். ‘உள்ளாட்சியில் நமது பங்கு’ என்ற தலைப்பில் காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் கே.பழனிதுரை, ‘சுற்றுச்சூழலும் காலநிலை மாற்றமும்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அறி வியல் இயக்கம் வி.சேதுராமன் ஆகியோர் பேசினர்.  வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார். தஞ்சை மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா நன்றி கூறினார்.  இதில், மாநில இணைச் செயலாளர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் டி.அருள்தாஸ், ஏ.கே.வேலவன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.