தூத்துக்குடி, டிச.25- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆம் தேதி பெய்த கன மழை மற்றும் வெள்ள பெருக்கு காரண மாக தூத்துக்குடி மாநகர், ஏரல், ஶ்ரீவை குண்டம், ஆத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்துள்ளது, இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சுப்பையா புரம், அரசு மருத்துவமனை பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து திங்கட்கிழமை இரண்டாவது நாளாக ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்தப்பணிகளில் மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாநில செயலா ளர் ஏ.வி. சிங்காரவேலன், மாநில துணைத்தலைவர் செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் தினேஷ்குமார், மாவட்ட பொருளாளர் மனோஜ், மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் கருப்பசாமி, மாவட்ட பொருளாளர் வேல்தேவா, மாவட்ட குழு உறுப்பினர் அய்யனார் உட்பட மதுரை மாநகர பகுதியைச் சேர்ந்த தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.