tamilnadu

img

வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.27-  தமிழ்நாடு சட்டமன்றத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், திருச்சி முக்கொம்பில் புதிய பூங்காவை உருவாக்கி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நிர்வகிக்கப்படும் என முன் மொழிந்ததைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அந்தநல்லூர் ஒன்றியக்குழு சார்பில் ஞாயிறன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் அஜித்குமார் தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயலாளர் சேதுபதி கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.