tamilnadu

img

உத்தவ் தாக்கரே மனைவியை இழிவுபடுத்தி பேசிய பாஜக நிர்வாகி!

மும்பை, ஜன. 8 - மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவியை இழிவு படுத்திய பாஜக தலைவர் ஜிதேன் கஜராயா-வுக்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே. இவரது புகைப்படத்தை கடந்த ஜனவரி 4-ஆம் தேதி டுவிட்டரில் பகிர்ந்த, பாஜக நிர்வாகி ஜிதேன் கஜராயா, அந்த புகைப்படத்தின் கீழ், ‘மராத்திய ராப்ரி தேவி’ என்று பதிவிட்டார். பீகார் மாநில முன்னாள் முதல்வ ரான லாலு பிரசாத்தின் மனைவி தான் ராப்ரி தேவி. ஊழல் வழக்கில் லாலு சிறைசெல்ல நேரிட்டபோது, ராப்ரி தேவி திடீர் முதல்வரானார். இந்நிலையில்தான் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மியை, ‘மாரத்திய ராப்ரி தேவி’ என்று பாஜகவின் சமூக ஊடக பிரிவு ஒருங்கிணை ப்பாளரான  ஜிதேன் கஜராயா தனி ப்பட்ட முறையில் விமர்சித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த  நிலையில், அந்தப் பதிவை அவர் நீக்கினார். சைபர் காவல்துறை யினர் முன்பும் ஆஜராகி விளக்கம் அளித்தார். எனினும் சிவசேனா  தலைவரும், மும்பை மேயருமான கிஷோரி பெட்னேகர், பாஜக நிர்வாகி ஜிதேன் கஜராயாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “யார் இந்த ஜிதேன் கஜராயா? தேசியவாத காங்கிரசில் இருந்து பாஜக-வுக்கு கங்காரு போல தாவி, இன்று மகாராஷ்டிர பெண் களைப் பற்றியும் ராஷ்மியை பற்றியும் இப்படி கீழ்த்தரமான கருத்துக்களை கூறி வருகிறார். பால் தாக்கரேவின் மருமகள், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி, ஆதித்யா தாக்கரேவின் தாயார் என நமக்குத் தெரிந்த ராஷ்மியின் பெயரை இழுத்ததற்கு என்ன காரணம்? மகாராஷ்டிராவில் பாஜக வளர்ச்சிபெற பால் தாக்கரேதான் காரணம். அவர்தான் பாஜகவை அரசியலில் வளர்த்து விட்டவர். இன்று அவரது மருமகளையே தவ றாகப் பேச பாஜக-வினர் துணிந்து விட்டார்களா? எங்கிருந்து அவர் களுக்கு இந்த தைரியம் வந்தது? கஜாரியாவுக்கு தைரியம் இருந்தால் சிவசேனாவின் மகளிர் அணி முன்பு வந்து இப்படிப் பேசட்டும் பார்ப்போம். அவருக்கு உரிய பதிலடியை அவர்கள் கொடுப்பார்கள். இவ்வாறு கிஷோரி பெட்னே கர் கூறியுள்ளார்.