புதுச்சேரி, செப்.3 - புதுவையில் ஆண்டு தோறும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி பெற்று மின் கட்டணம் உயர்த்தப்படு கிறது. வழக்கமாக ஏப்ரல் 1 ஆம் தேதி கட்டண உயர்வு அமலுக்கு வரும். இந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி கள், ஜனநாயக அமைப்பு கள் மின் கட்டணத்தை உயர்த்தாமல் ரூ.500 கோ டிக்கு மேல் அரசுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கியை வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். இருப்பினும் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை மின்சார ஆணையம் கடந்த ஜூன் மாதம் அனு மதியளித்தது. இதையடுத்து, உடனே மின் கட்டண உயர்வை அரசு நடைமுறைக்கு கொண்டு வர கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. அதுவும் ஜூன் 16 ஆம் தேதி முன் தேதி யிட்டு மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என புதுவை அரசின் மின்துறை அறிவித்தது. இந்தகட்டண உயர்வால் ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்ப தால் கட்டணத்தை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும் என்று சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சி களும் வலியுறுத்தின. ஆனால், ஆளும் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, சிபிஐ எம்.எல் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் சார்பில் புதுச்சேரி தலைமை செய லகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்களன்று (செப்.2) நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை அருகிலிருந்து துவங்கிய ஊர்வ லத்திற்கு திமுக அமைப்பா ளரும் எதிர்கட்சி தலைவரு மான சிவா, மாநில காங்கி ரஸ் தலைவர் வைத்தி லிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி, சிபிஎம் மாநிலச் செய லாளர் ஆர்.ராஜாங்கம், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், விசிக முதன்மைச் செயலாளர் தேவ பொழி லன், சிபிஐ எம்எல் புரு ஷோத்தமன் ஆகியோர் தலைமை தாங்கினர். போர்க்கோலம் அண்ணா சாலையில் இருந்து நேரு வீதி வழியாக தலைமை செயலகம் நோக்கி சென்றபோது தடுப்பு வேலிகளை அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், அந்தப் பகுதி போர்க் கோலம் போல் காட்சியளித்தது. இதையடுத்து அனைவரை யும் காவல்துறையினர் கைது செய்தனர்.