தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கண்டுபிடிப்பு இயக்கம் நடத்திய பயிலரங்கம்
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கண்டுபிடிப்பு இயக்கம் என்ற திட்டத்தின்கீழ், 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்காக ஒரு சிறப்பு பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த பயிலரங்கம், அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களில் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும். அத்தகைய தேர்வுகளுக்கு தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. முன்னதாக, கடந்த மார்ச் 26 முதல் 28 ஆம் தேதி வரை மூன்று நாட்கள், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவிகளுக்காக இந்த பயிலரங்கம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனர். இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3 வரை, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்காக இப்பயிலரங்கம் நடைபெற உள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன், மாணவிகளுக்காக நடைபெற்ற பயிலரங்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் செல்வ முத்துக்குமரன், துணை அமைப்பாளர் கார்த்தி, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் பாவை அனிபா இணைந்து, வங்காரம்பேட்டை முஸ்லீம் தெருவில் உள்ள பள்ளி வாசலில் ரமலான் சிறப்பு தொழுகையை நிறைவேற்றி வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.