tamilnadu

img

கோவில் இணையதளங்களின் செயல்பாட்டு வழிமுறைகள் உத்தரவாக பிறப்பிக்கப்படும்: உயர்நீதிமன்றம்

மதுரை, டிச.1-  கோவில் இணையதளங்கள் செயல்பாடு குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக பிறப் பிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்  கண்டன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பொதுநல மனு வினை தாக்கல் செய்திருந்தனர். அதில், “தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல முக்கிய கோவில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்  கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்து பலர் தற்போது அதிகளவில்  வந்து செல்கின்றனர்.

இக்கோவில் களுக்கு நேரடியாக வரும் பக்தர்  கள் காணிக்கைகளை செலுத்தி அதற்  கான ரசீதுகளை பெற்று செல்கின்ற னர். வெளி மாவட்டங்கள், வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் பக்தர்கள் கோவில் இணையதளத்தில் உள்ள  கணக்குகளில் பணத்தினை செலுத்து கின்றனர். தமிழகத்தில் முக்கியமாக உள்ள  சென்னை கபாலீஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை  பெரிய கோவில் போன்ற பிரபலமான  கோவில்களிலும் இதே போல் திருக்  கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவி லில் அறுபதாம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட திருமணங்கள் சிறப்பாக நடைபெறும் கோவில்களில் சில தனி யார் இணையதள முகவரி வைத்து கோவிலுக்கு பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகளை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

இது குறித்து  மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை யும் இல்லை. எனவே தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்த மான கோவில்கள் மற்றும் மடங்க ளின் பெயர்களில் போலியாக செயல்  படும் இணையதளங்களை முடக்க வும், இணையதளம் வைத்திருந்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.” என்று கோரப்  பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதி பதிகள் மகாதேவன், சத்தியநாராய ணன் அமர்வு முன்பு வியாழனன்று நடைபெற்றது.  மனுதாரர் தரப்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர் கார்த்தி கேயன், கோவில் பெயரில் இணைய தளங்களை கோவிலுக்கு சம்பந்த மில்லாத சிலர் வைத்துள்ளதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், கோவில் இணையதளங்கள் செயல் பாடு குறித்து உரிய வழிமுறைகளை  நீதிமன்றம் பிறப்பிக்க உள்ளது என்று  தெரிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை தேடி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.