பட்டுக்கோட்டையில் மகளிர் விடியல் பயண பேருந்து சேவை துவக்கி வைப்பு
தஞ்சாவூர், மே 6- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தடத்திற்கு மகளிர் விடியல் பயண பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை கிளை தடம் எண். 341 புறநகர் தடப்பேருந்தை மகளிர் விடியல் பயணம் நகர பேருந்தாக (A28) பட்டுக்கோட்டை – சிர மேல்குடி (வழி) காசாங்காடு, பட்டுக்கோட்டை- காரப்பன்காடு (வழி) காசாங்காடு, பட்டுக்கோட்டை – காரப்பன்காடு (வழி) மதுக்கூர் வழித்தடத்தில், திங்கள்கிழமை பட்டுக்கோட்டை பேருந்து நிலை யத்திலிருந்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில், அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (வணிகம்) எஸ்.ராஜேஷ், பட்டுக்கோட்டை கிளை மேலாளர் கே.முருகானந் தம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.